Search This Blog

Wednesday, May 20, 2015

காதல் கடிதம் - Love letter

     காதல் கடிதம்



ஓயாத உன் நினைவில்

உறங்க மறுக்குதே என் கனவு,


உன் பின்னே வர அடம்ப் பிடிக்குதே

சிறு பிள்ளையாய் என் மனது.

                       வரிகள்: சின்னத்துரை,



Thursday, May 14, 2015

                       ஆதலால் காதல் செய்வீர்


பாரம்பரியம் சொல்லும் பாகுபாடும்,

சாஸ்திரங்கள் சொல்லும் மூடமும்,

மனிதத்தை கொள்ளும் மதமும் தொலைத்து,

புதியதோர் காதல் தேசத்தை உருவாக்கிட

காதல் செய்வீர்.... 
                          

                                                            வரிகள்: சின்னத்துரை



                                                      

Monday, November 24, 2014

Kaadhal Kavithai

          காதல் கவிதை


உன்  விழி  பார்த்து  விழிபிதுங்கி

விடை  தெரியாமல்  நிற்க்கின்றேன்

விண்மீன்களாக

உன்  விரல் தொட....

                                       வரிகள் : சின்னத்துரை



Sunday, November 23, 2014

Annan thambi - Tamil kavithai

                        
                            அண்னன் - தம்பி

அன்னையின்  அரவணைப்பில் அனிச்சம்  பூவாக
பூத்துக்  கிடக்கும் தம்பிதனைக்  கண்டதும்,
தான் இதுவரைக்  கண்டிதிராத  மகிழ்வினைக்
கண்டதுபோல் மனம்  மயிலாடி, புன்னகைப் புரண்டோடி,
அவன் விரல் பிடித்து , அன்னைக்கு முன்னதே
இவன் என் தம்பியம்மா என மனம் மழுவி,
அக்கம் பக்கம் அனைவருக்கும் இவன் என்
தமையன்  என மார்த்  தட்டி,
இதுவரை  விளையாண்டப்  பொம்மைகளைப்
போ என துரந்து , தம்பிதனை  தைஞ்சமாய்க்  கிடந்து
அவனோடு  விளையாடி, இன்புற்று,
இதுவரையில் தன் மேல் விழுந்த  ஒட்டுமொத்த
அன்னை, தந்தையரின் பாச மழை
தமயன் மேல் விசத் தொடங்கியதும்
கடுப்பேறி  கை நீட்டத்  தொடங்குவான்
அரியும்  பருவம்  வரையாக,

என்ன தான் கைகழப்பு  இருந்தாலும்
அன்னியரின்  கைப் பட  அனுமதியான்,

தான்  அடிமைகொண்ட  கெட்டொழுக்கச்  சேற்றினை
தான் மரைத்து , நல்லதனைப்  போதிக்கும்  போதகனாகி
தன்  ஆசை  துறந்து ,அவன்  ஆசை கான
எப்பொழுதும்  அக்கரைக்  கண்  அவன்  மேலே வீசி
காலமும்  தோழாக  தொற்றிருப்பான்   தோழனைப்  போல.... அண்னன்.....
                                                                                                        வரிகள் : சின்னத்துரை





Saturday, August 2, 2014

                  
 இருமனக் கலப்பு - விழா            

                             ( பாலசுப்ரமணியன்  -  ரக்‌ஷிதா )


உன்  மனம் மழுவி ,அவள் மனம் தழுவ

ஈர் ஐந்து திங்களாய் ,

காதல்  கனியும்  எனக்  காத்திருந்து,

காதலியின் கரம் பிடித்த பாலனே!



திருமணம் கான இருமனம் போதாதென்று

பெருமனமாம்  பெற்றவரின் மனம்

கவர்ந்த மைந்தனே!



இனம்  கலைந்து   மனம்  கலக்கும்   மானிடனே!


இல்லற  வாழ்விற்க்கு  நுழைந்திடும்

உங்களின்  இச்சுதந்திர  பொன்நாளில்

எல்லா  வழமும்  பொழிந்து  பெரிகிட

என்  வாழ்த்துக்கள்…….

                                                                                                                         
                                                                                             இவன்,

                                                                            தோழன்; சின்னத்துரை                                                              

Kavidhai

Powered By Blogger